தாய்ப்பாசம்ன்னா இப்படித்தான் இருக்கணும்.. அரங்கத்தையே அழவைத்த இவரின் பேச்சை கேட்டுப் பாருங்க…!

  அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம். 

        எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம்  பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அந்தவகையில் இங்கேயும் ஒரு பெண்ணின் தாய்ப் பாசம் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அது என்ன எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

   வேந்தர் டிவியில் நடத்தப்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பேச வந்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எல்லாக் குழந்தைகளையும் போல் அது சரியான நேரத்தில் குப்புற கவிழவில்லை. அதேபோல் அந்தக் குழந்தைக்கு தலைநிக்கவும் இல்லை. உடனே தாய், ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே குழந்தையை சோதித்துப் பார்த்த மருத்துவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்தார். ஸ்கேன் எடுத்தபின்பு, குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்தது. உடனே அந்தக் குழந்தையை பிசியோதெரபி சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைத்தார். அதுவும் ஓரிரு நாள் சிகிச்சை கொடுத்தால் போதாது. தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும் என மருத்துவர் சொன்னார். அதன்படி அந்த தாய் மாதக்கணக்கில் அழைத்துப் போய் சிகிச்சைக் கொடுத்தார்.

   அதுமட்டும் இல்லாமல் திடீரென அந்தக் குழந்தைக்கு கால் வீங்கிவிட்டது. அதற்கு தசைசிதைவு எனத் தெரியவர 80 ஆயிரம் ரூபாய் சிகிச்சைக்கு ஆகும் எனத் தெரியவந்தது. ஆனால் இந்த பெண் 50 ஆயிரம் தான் இருக்கிறது என அழ மருத்துவமனை அந்த காசை வாங்கிவிட்டு சிகிச்சை அளித்தது. தலை நிற்காது, மூளை வளர்ச்சி இல்லை என சொன்ன அந்த குழந்தையை ஒன். டூ, த்ரீ, தொடங்கி அம்மா, அண்ணா எனச் சொல்ல வைத்ததுவரை அசத்தியிருக்கிறார் இந்த பாசக்கார அம்மா. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். பார்வையாளராக கேட்டுக்கொண்டு இருந்தவர்களே அழுதுவிட்டார்கள்.