இந்த குழந்தையின் சிரிப்புக்கு முன்னாடி எதுவுமே பெரிசு இல்ல… தன் ஒற்றை செயலால் கோடி புண்ணியம் பெற்ற நபர்..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு பெண் தன் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு தெரு, தெருவாக பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு டீக்கடையில் போய் கைக்குழந்தையோடு காசு கேட்டு நின்றார் அந்தப் பெண். அப்போது அந்த கடை ஓனரைப் பார்த்து அந்தக் குழந்தை ரொம்பவே சிரித்தது. தாயின் மடியில் இருந்த அந்தக் குழந்தை அழகான சிரிப்பை உதிர்க்கவே, தான் ஒரு தர்மம் எடுப்பவரின் குழந்தை என்பதையெல்லாம் தாண்டி அந்தக் குழந்தை சிரித்த கனதில் சொக்கிப் போனார் கடையின் உரிமையாளர்.

உடனே பிச்சை போடுபவரின் மன நிலையில் இருந்து அகன்று, ஏதோ அந்தக் குழந்தையின் உறவினர் போலவே கடையில் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டோடு வெளியே வந்தார். குழந்தைக்கு பிஸ்கட் பாக்கெட்டை அவர் கொடுக்க முயல அப்போதும் குழந்தை தன் அழகான சிரிப்பை பதிலுக்கு உதிர்த்தது. இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன். மனம் லயித்துப் போய்விடும். இதோ உங்களுக்காக அந்த வீடியோ…