செண்டை மேளம் வாசித்து அசத்திய இளம்பெண்.. என்ன ஒரு அடிபொளி பெர்பார்மன்ஸ் பாருங்க..!

               முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

   கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவரிசையில் இப்போது அழகிய இளம்பெண் ஒருவர் ஊர் திருவிழாவில் மிகவும் ரசனையோடு செண்டை மேளம் வாசித்து அசத்துகிறார். 

      பொதுவாகவே கேரளத்தின் செண்டை மேளத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. செண்டை மேளம் ஊர்கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் போது அனைவருமே சொக்கிப் போவது உண்டு.அதிலும் அதிக எடைகொண்ட செண்டையை தோளில் போட்டுக்கொண்டு, ஒரு பெண் செம க்யூட்டாக ஆடுகிறார். அதிலும் ஆண்களுக்கு இணையாக அவர் செண்டை மேளத்திலும் அசத்துகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.