பால் குடிக்க மாட்டாராம் டீதான் வேணுமாம்.. பாட்டியுடன் மல்லுக்கட்டும் குட்டீஸ்..!

                 குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். 

 ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

 குட்டிக்குழந்தைகளுக்கு சப்பாடு கொடுப்பதே ஒரு கலை. இங்கேயும் அப்படித்தான். சில குட்டி மொட்டுக்களுக்கு அவர்களது உறவினர்கள் சாப்பிடக் கொடுக்கிறார்கள். பாட்டி கையால் டீயை கப்பில் உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை டீ கப்பை வாயில் இருந்து எடுத்ததும் செம கடுப்பாகிறது. இதேபோல் இன்னொரு குழந்தைக்கு சாப்பாட்டைக் கிட்டே கொண்டுபோய் நீட்டிவிட்டு அதன் அப்பா, தன் வாயிலேயே வைத்துக் கொள்கிறார். இதற்கு அந்த குழந்தையும் செம க்யூட் ரியாக்சன் கொடுக்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.