உனக்கு நான் கால் தாரேன்… கால் இழந்த அம்மாச்சிக்கு தன் காலை கொடுக்க நினைக்கும் குழந்தையின் அன்பு…

0

குழந்தை என்றாலே அழகு தான். கடவுளின் வரமாக தான் குழந்தைகளை அனைவரும் பார்க்கிறோம். மனதை மயக்கும் மழலைகளின் குறும்புத் தனத்தை பார்த்தால் நம்முடைய மனதில் உள்ள அதனை வேதனைகளும் மறந்து போகும். அந்த வகையில் இங்கு ஒரு காணொளியை பாருங்கள்.

ஒரு அம்மாச்சியோ தன்னுடைய ஒரு காலை இழந்து இருக்கிறார்கள். அவர்களின் மனதில் சொல்ல முடியாத அளவில் வேதனைகள் இருக்கும். அவர்களின் வேதனையை போக்கும் விதமாக அவர்களின் பேர குழந்தையோ தன்னுடைய காலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து தன்னுடைய அம்மாச்சியின் இழந்த காலில் கொண்டு தன்னுடைய காலை வைத்து பார்க்கிறது. அப்போது குழந்தையிடம் குழந்தையின் மாமா அம்மாச்சிக்கு காலை கொடுப்போமா என்று கேட்க அதற்க்கு அந்த குழந்தையோ அதனின் மழலை மொழியில் சரி என சொல்லி தன்னுடைய காலை அம்மாச்சிக்கு வைத்து பார்க்கிறது.

அம்மாச்சிக்கு மனதில் இருக்கும் வலிகள் அத்தனையும் மறந்து மழலையின் குழந்தை மனதை பார்த்து தன்னுடைய வலியை மறந்து ஆனந்தமாக சிரிக்கிறார். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் இந்த குழந்தையின் செயலை பார்த்து அனைவரும் குழந்தையை பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed