இந்த பெரிய மனுஷி எவ்வளவுஅழகா வெட்கப்படுறாங்க பாருங்க… பல முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி…!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பள்ளிக்கூடத்தில் சக மாணவிகளோடு சேர்ந்து குட்டி தேவதை ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு உறவுகாரர் குழந்தைகளை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

சாப்பிட்டுக் கொண்டே இருந்த அந்தக் குட்டிக்குழந்தை வீடியோ எடுப்பதைப் பார்த்துவிட்டு வெட்கத்தில் செம க்யூட்டாக ஒரு ரியாக்சன் கொடுக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன். அவ்வளவ் ரசனையாக இருக்கிறது. இதோ அந்தக் காட்சி….