தமிழ், தெலுங்கு, கன்னடம் என சினிமாவில் கலக்கிய பிரபல நடிகையா இது..? தற்போது என்ன செய்கிறார் பாருங்க…!

தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை ஹீரோக்கள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கின்றனர். ரஜினி, கமல் எல்லாம் 40 வருடங்கள் கடந்தும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் அப்படி இல்லை. திருமணத்தோடு அவர்களின் மார்க்கெட்டும் விழுந்துவிடுகிறது. 

    அந்தவகையில் கன்னடம், தமிழ்,தெலுங்கு என ஒருகாலத்தில் கலக்கியவர் தான் நடிகை லீலாவதி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினி பீல்டில் இருக்கும் இவர், இதுவரை 600க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் மிகவும் கஷ்டமான குடும்பத்தில் பிறந்தவர்கள். குடும்ப கஷ்டத்தால் சின்ன வயதிலேயே மாதம் 5 ரூபாய் சம்பளத்திற்கு வீட்டுவேலைக்குப் போயிருக்கிறார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கப் போனவருக்கு பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தது.

  ஒருகட்டத்தில் வ்சனங்களை மறக்காமல் பேசும் லீலாவதியின் அறிவு, அவரை சீக்கிரமே மேடை நாடகத்தில் ஹீரோயினாக்கியது. தொடர்ந்து சினிமா சான்ஸ்கிடைக்கவே தன் பெயரையும் லீலா என்பதை லீலாவதி என மாற்றிக்கொண்டார். கதாநாயகி, குணச்சித்திரம், அம்மா வேடம் என பல கெட்டப்களும் செய்திருக்கும் லீலாவதி, பாலச்சந்தர் மூலம் தான் தன்னை தமிழ் மக்களுக்குத் தெரியும் என நினைவுகூர்கிறார். இப்போது வயோதிகத்தில் இருக்கும் லீலாவதி இந்த வயதிலும் விவசாயமும் செய்துவருகிறார். இவரது மகன், வினோத்ராஜ் கன்னட சினிமாவில் நடிகராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.