ப்யூட்டியாக ஆட்டம் போட்ட பாட்டி…… இணையத்தை கலக்கிய ஆட்டம்….. என்னமா ஆடுறாங்க இந்த வயசுலயும்……

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போட்ட பாட்டி இணையத்தை கலக்கி வருகிறார். “கார் பிரீ சன்டே” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சாலையில் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் போட்ட குத்தாட்டம் இணையவாசிகளை திக்கு முக்கு ஆட வைத்துள்ளது. அதில் ஒருவர் முன் நின்று நடன அசைவுகள் சொல்லி கொடுக்க மற்றவர்கள் அதை பின்பற்றி நடனம் ஆடினர். அனைவரும் ஒரே மாதிரியாக நடனம் ஆடினார்கள், அதிலும் ஒரு பாட்டியின் நடனம் பிரமிக்கவைத்தது. ஏன்னென்றால் இளைஞர்களுக்கு ஈடுகொடுத்து ஆடிய பாட்டியின் நடனம் இணையவாசிகளை ஆச்சரியபட வைத்துள்ளது.

இந்த வயதிலும் பாட்டியின் ஆட்டம், இந்த ஆட்டம் போதுமா…..இன்னும் கொஞ்சம் வேண்டுமா…… என்று இளைஞர்களை பார்த்து கேள்வி எழுப்பும் அளவிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதை பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் இது மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுக்கும். சமூக வலைத்தளவாசிகள் பாட்டியின் குத்தாட்டத்தை ரசிப்பதோடு விட்டு விடாமல் பாட்டியின் மகிழ்ச்சிக்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அவர்களை யாரேனும் பேட்டி எடுத்து அவர்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் அளவிற்கு சமூக வலைத்தளவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.