நல்ல வேளை வழுக்கை தலையாக இருந்ததால் தப்பிச்சாரு… திருஷ்டி சுத்திய நபருக்கு நிகழ்ந்ததை நீங்களே பாருங்க..!

கெட்டதிலும் நல்லது நடந்துள்ளது என்று கூற கேட்டிருப்போம். அது போல் ஒரு நிகழ்வு நடேந்தேறியுள்ளது. தமிழ் நாட்டில் எல்லோரது வீடுகளிலும் திருஸ்டி சுற்றும் பழக்கமிருக்கும். வீட்டில் எங்காவது குடும்பத்துடன் சென்று வந்தாலும் சரி, நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பும் உறவினர்களுக்கும், வீட்டில் நன்மையான நிகழ்ச்சிகள் நடந்தாலும், முதன் முதலாக பிறந்த குழந்தையை வீட்டிற்குள் எடுத்து வரும்போதும் திருஸ்டி சுற்றுவது வழக்கமான ஓன்றாகும்.

அது போல் குடும்பத்துடன் திருஸ்டி சுற்றிய நபர் அதை உடைப்பதற்காக தூக்கி உடைக்கும் நேரத்தில் அதில் இருந்த கற்பூரம் அவரது தலையில் விழுந்து விட்டது. அதை சுதாரித்து கொண்ட நபர் உடனடியாக தனது தலையில் எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தை தட்டி விட்டு விட்டார். நிச்சயம் மனதிற்குள் இவ்வாறு நினைத்திருப்பார் நல்ல வேலை தலையில் முடி இல்லாததால் தப்பித்தேன், இல்லையென்றால் தலை கருகியிருக்கும் என்று யோசித்திருப்பார்.

சுற்றி இருந்த உறவினர்கள் சற்று அதிர்ச்சியைடந்து அவரை பார்துகொண்டிருந்தனர். அவரும் சிரித்தவாறே அதை பொருட்படுத்தாமல் நகர்ந்து விட்டார்.