90 வயது தாண்டியும் தண்ணீருக்குள் இந்த தாத்தா செய்யும் செயலைப் பாருங்க.. மெய்சிலிர்த்து போவீங்க..!

                  இந்த உலகத்தில் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். அந்த வகையில் சாலையோரத்தில் தர்மம் எடுத்துச் சாப்பிடும் ஒரு வயதான தாத்தாவின் திறமை இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. 

   பொதுவாகவே வயதானவர்கள் இன்னொரு குழந்தை என்பார் ஷேக்ஸ்பியர். வயதானவர்கள் பொதுவாகவே வயது கூட, கூட ஞாபக மறதியில் தவிப்பார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் அப்படியல்ல. அவர்களில் சிலர் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள். அந்தவகையில் இந்த தாத்தாவின் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    80 வயதைக் கடந்த தாத்தா அவர் ஆனால் அவர் மிகவும் அசால்டாக குளத்தில் குதிக்கிறார். நீச்சலடித்துக் குளிக்கிறார். அதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அடுத்து அவர் செய்வது தான் வேற லெவல். தண்ணீருக்குள் அப்படியே நீச்சலே அடிக்காமல் தன் உடலை படுத்தது போல் கிடக்கச் செய்கிறார். யோகாசனங்கள் செய்கிறார். தண்ணீருக்குள் மூழ்கவே செய்யாமல் அப்படியே யோகாவும் செய்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சிகளைப் பாருங்களேன்.