வெறும் கையை வைத்து நாதஸ்வர இசையை கண்முன் கொண்டு வந்த சிறுவன்.. வேற லெவல் திறமைதான் போங்க..!

இந்த உலகில் யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்கவே முடியாத விசயம் ஆகும். அந்தவகையில் ஒரு குட்டிப் பையனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கே ஒரு சின்ன பொடிப்பையன் பார்க்க 4 ஆம் வகுப்பு படிப்பது போலத்தான் இருக்கிறான். அவன் தனது வெறும் கைகளை மட்டும் வாய் அருகே கொண்டுபோய்விட்டு நாதஸ்வரம் இசைப்பது போல் சப்தம் எழுப்புகிறான். இது எப்படி சாத்தியம் என இணையவாசிகள் இதில் மெய்சிலிர்த்துப் போகின்றார்கள். இதோ நீங்களே குறித்த இந்த வீடியோவைப் பாருங்களேன்.

https://youtube.com/watch?v=Kdq7DE528zo