வாக்குறுதி கொடுத்தால் மீறவே செய்யாத ராசிக்காரங்க இவங்க தான்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா..!

மனிதர்களின் குணம் என்னதான் முக்கியமாக இருந்தாலும் சில நேரங்களில் அவர்களின் ராசிக்கென்றே சில பிரத்யேக குணங்களும் உண்டு. சிலநேரங்களில் அவர்கள் முயற்சியே செய்யாவிட்டாலும் கூட அவர்கள் ராசியெல்லாம் தொட்டதெல்லாம் ஜெயமாவதையும் பார்த்திருப்போம். வாருங்கள்…இந்தப் பதிவில் வாக்கு கொடுத்தால் மீறவே செய்யாத ராசிக்காரர்கள் யார் எனத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

மகரம்..

பொதுவாகவே இவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம். இவர்கள் கொடுத்த வாக்கினை மிகவும் மதிப்பார்கள். அதனால் இவர்கள் உங்களுக்கு ஒரு வாக்கு கொடுத்தால் நிச்சயமாக இவர்களை நம்பலாம்.

சிம்மம்..

இவர்கள் மிகவும் கனிவு, கன்னியம்மிக்கவர்கள். மற்றவர்கள் உணர்வினை புண்படுத்தவே மாட்டார்கள். ஒரு வேளை கொடுத்த வாக்குறுதியை மீறினால் அது அவமானம் என நினைப்பார்கள். இதனாலேயே வாக்குறுதியை மீறவே மாட்டார்கள்.

விருச்சிகம்

சிம்மராசிக்காரர்களைப் போலவே இவர்களும் தங்கள் இமேஜ்க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் பெயர் கெட்டுப் போய்விடும் என்பதாலே கொடுத்த வாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கன்னி

கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என இவர்கள் அதிகமாக கவலைப்படுவார்கள். இயல்பிலேயே இவர்களுக்கு உதவும் தன்மையும், மற்றவர்களுக்கு கொடுக்கும் தன்மையும் அதிகம்.

கடகம்..

இவர்கள் மற்றவர்க்கு கொடுத்த வாக்கை மீறுவதை பெரிய பாவமாக நினைப்பார்கள். சொன்னதை செய்வதிலும் இவர்கள் உறுதியானவர்கள். இதனால் இந்த ராசியினரெல்லாம் வாக்கு கொடுத்தால் நிச்சயம் நம்பலாம். மற்ற ராசியினரின் வாக்குகளை முழுதாக ந்ம்பாதீர்கள். அது சூழலைப் பொறுத்தது.