புல்லட்டு பாண்டி பாடலுக்கு செம ஆட்டம்போட்ட கல்யாணப் பொண்ணு.. வெட்கத்தில் ஒதுங்கி நின்ற மணமகன்..!

திருமணவீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமணவீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது. 

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமணவீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. 

        இதனால் இப்போதெல்லாம் திருமணவீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

  அந்தவகையில் இங்கேயும் ஒரு மணமக்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கல்யாண நாளும் வந்தது. அப்போது மணக்கோலம், முகூர்த்தப்பட்டு, நகைகளுடன் கல்யாணப் பொண்ணு செம ஆட்டம் போட்டார். புல்ல்ட் பாண்டி பாடலுக்கு செம மாஸாக ஆட்டம் போட்டார். இதைப் பார்த்த கல்யாண மாப்பிள்ளையே வெட்கத்தில் ததும்புகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.