புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண் கண் கலங்கும் காட்சி… என்னதான் இருந்தாலும் தாய்வீடு போல வருமா?

         திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது

       ஆனாலும் சில பெண்கள் புகுந்த வீட்டுக்குச் செல்லும் போது இப்போதும் தங்களையும் அறியாமல் கண்கலங்கி விடுவார்கள். காரணம் என்னதான் புகுந்த வீட்டில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தாய் வீட்டுக்கு முன்பு எதுவுமே இணையில்லை. அதிலும் புகுந்த வீட்டில் இருப்பதைவிட தாய் வீடு எப்போதுமே சொர்க்கம் தான். அத்தை, மாமா இருவரும் அப்பா, அம்மா போல் பழகினாலும் அம்மா, அப்பாவிடம் இருக்கும் உரிமைகள் போல் வரவே செய்யாது.

  இதோ இங்கேயும் அப்படித்தான் கேரளத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மிகப் பெரிய அளவில் திருமணம் செய்துவைத்தனர். ஆனாலும் அவர் அவரையும் அறியாமல் மாப்பிள்ளை வீட்டுக்கு கார் ஏறியதும் கலங்கிப் போய்விட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.