பாவாடை தாவணியில் ஹீரோயினை போல் அழகு பதுமையாக… மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்கள்..!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

பெண்கள் இப்போதெல்லாம் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுவது பேஷன் ஆகிவிட்டது. ஒருவகையில் அதற்கு ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரிலும் காரணம். அந்தவகையில் இப்போது அதுலா, ஆதித்யா என்னும் இரு பெண்கள் தங்கள் வீட்டு மொட்டைமாடியில் நின்று செம அழகாக ஆட்டம் போட்டுள்ளனர். பாவாடை, தாவணியில் அழகு பதுமைகளாக இருக்கும் இந்த் சகோதிரிகள் சரட்டு வண்டியில பாடலுக்கு ஆடினர். இவர்களின் அழகும், அழகான ஆட்டமும் இணையத்தில் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். இதோ நீங்களே காட்சியைப் பாருங்களேன்.