பயமின்றி பனை மரம் ஏறும் 9 ஆம் வகுப்பி மாணவி.. அப்பாவுக்கு இப்படியும் ஒரு உதவியா? நெகிழவைக்கும் சம்பவம்..!

    இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். கடினமான உடல் உழைப்பிலும் ஆண்களுக்கு இணையாக களத்தில் இருந்து மிளிர்கின்றனர். 

                  கனரக வாகனங்களையும் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி ஒருவர் தங்கைக்கு உதவும் நோக்கத்தில் பனை மரம் ஏறி, தானே தன் கல்விக்கான செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார். இதுகுறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். 

   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் என்னும் பனை ஏறும் தொழிலாளியின் மகள் ஹரீஸ்மா அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் 7 ஆம் வகுப்பு முதலே பனைமரம் ஏறிவருகிறார். துளியும் அச்சமின்றி பனையின் மேல் விறு, விறுவென ஏறி பாளையும் சீவி விடுகிறார். பள்ளி செல்வதற்கு முன்னும், பள்ளி விட்டு வந்த பின்னும் பனை ஏறுகிறார். அரசு பனை கல்லுக்கு அனுமதித்தால் எங்கள் வேலை கொஞ்சம் குறையும். அரசு கல் தடையை நீக்கவேண்டும்.