தண்டவாளத்தில் ஓடும் ரயிலுக்கு கீழே படுத்து இளம்பெண் செய்த செயல்… என்னம்மா இது இப்படியெல்லாம் ஆரம்பிச்சுட்டீங்க..?

       இன்றைய காலப் பெண்களோடு வாழ்வது என்பதே மிகவும் சவாலான விசயமாகிவிட்டது. அவர்களுக்கு எப்போது கோபம் வரும் என்பது யாராலும் கணிக்கமுடியாத விசயமாக இருக்கிறது. அதிலும் அவர்களுக்கு தங்கள் காதலர்கள் மீது அடிக்கடி சுளீர்…சுளீர் என கோபம் வந்துவிடும்.

  காதல் கைகூடுவதே பெரிய விசயம் தான். முன்பெல்லாம் ஆண்கள் தான் கோபப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் கோபத்திற்கு ஆண்கள் பயப்படும் சூழல் வந்துவிட்டது. அதிலும் ஆண்கள் மிகவும் பயந்துடன் இருப்பதால் தான் மனைவிகளுக்கு பயந்து குடிக்கு ஆளாகும் சூழலில் தள்ளப்படுவதாகவும் பேச்சு உண்டு.

  இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண்ணிற்கு தன் காதலனின் மீது திடீர் கோபம் வந்துவிட்டது. உடனே, தண்டவாளத்தில் தலையை வைப்பதாக காதலனிடம் சொல்லிவிட்டு வேகமாக தண்டவாளத்திற்கு வந்து படுத்துக்கொண்டார். அதே நேரத்தில் சரக்கு ரயில் ஒன்றும் வந்தது. இந்தப் பெண் தற்கொலை செய்யப் போகிறார் எனக் கணித்த வாலிபர் ஒருவர் இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தார். ஆனால் அந்த பெண்ணோ தண்டவாளத்தில் நீளமாக தனக்கு அடிபடாதவகையில் தோதாக படுத்துக்கொண்டு தன் காதலனிடம் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். ரயில் அவரைக் கடந்து சென்றதும், தண்டவாளத்தில் இருந்து மிக கேஸ்வலாக எழுந்து சென்றார். அதுவும் போன் பேசிக்கொண்டே!

  ஆனால் இவரைத் திருமணம் செய்யப் போகும் அந்த காதலனின் பாடு நிச்சயம் ஏகத் திண்டாட்டம் தான். இதோ நீங்களே பாருங்களேன்…