சின்னக் குழந்தைகளின் செல்லச் சிணுங்கல்.. இந்த வீடியோ பாருங்க உங்க மனசுல உள்ள கவலையெல்லாம் காணாமல் போய்டும்…!

      குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சிகளில் ஒன்றுதான் குழந்தைகளின் செய்கைகள் ஒவ்வொன்றும்  நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைத்துவிடும். 

           ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது. 

   இங்கேயும் சில குட்டிதேவதைகள் செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. சாப்பிட சொல்லும் அப்பாவிடம் நான் பாவம் இல்ல என செல்லமாகச் சொல்லி அழும் குழந்தைத் தொடங்கி, சப்தம் கேட்டதும் அழும் குழந்தை வரை இங்கே அழகான குட்டி மொட்டுகளின் சுவாரஸ்யமான மூவ்மெண்ட்ஸ் தொகுக்கப்பட்டுள்ளது. இதோ நீங்களே இந்த காணொலியைப் பாருங்களேன்.