இந்த சின்ன வயசுல தங்கச்சி மேல இவ்வளவு பாசமா..? தங்கைக்காக அண்ணன் செய்த மனதை உருகவைக்கும் காட்சி..!

                         என்னதான் நாம் வளர்ந்து பெரிய வேலைக்கெல்லாம் போனாலும்கூட நம்மிடம் மாறாத ஒரு விசயம் இருக்கும். அது என்ன தெரியுமா? அதுதான் பாசம். அதிலும் அண்ணன், தங்கை பாசம் என்றால் கேட்கவே வேண்டாம்.

  இவ்வளவு ஏன் அண்ணன் பெரிய டெரர் பீஸ் போல் பார்ப்பதற்கு இருப்பார். ஆனால், தன் தங்கையின் திருமணத்தின் போது பார்த்தால் தங்கை தன்னைப் பிரிந்து செல்வதை நினைத்து அழுதுகொண்டு இருப்பார். அந்த அளவுக்கு அண்ணன், தங்கை பாசம் மிகப்பெரியது. எத்தனை பெரிதாக வளர்ந்துவிட்டாலும் தங்கச்சிகள் என்றால் அண்ணன்களுக்கு எப்போதும் ஒரு கிரேஸ் தான். அவர்கள் கேட்டால் எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொடுத்து விடுவார்கள்.

    ஆனாலும் சின்ன வயதில் பள்ளிக்கூட வயசில் எல்லாம் அவர்களுக்குள் சண்டை தான் அதிகமாக நடக்கும். ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை செய்வார்கள். ஆனால் அந்த வயதிலும்கூட சில அண்ணன், தங்கைகள் பக்குவமாக இருப்பார்கள். அந்தவகையில் இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு அண்ணன் தன் தங்கையின் மேல் உயிரையே வைத்துள்ளார். சாலையில் மழை பெய்து தண்ணீர் கட்டி நிற்கிறது. தன் தங்கை தண்ணீரில் கால்பட்டு நனைந்துவிடக் கூடாதென்று அந்தப் பொடி அண்ணன், தன் தங்கையைத் தன் தோளில் தூக்கிச் செல்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். 

 இந்த அண்ணன், தங்கை பாசத்தின் முன்பு எதுவுமே பெரிது இல்லை  என்பீர்கள். வீடியோ இதோ…