அய்யோ என் போண்டாவைக் காணோம்… கல்யாண வீட்டில் மாப்பிள்ளையை அலறவிட்ட கல்யாணப் பொண்ணு..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமணவீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமணவீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

   அதிலும் மாப்பிள்ளை பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது. ஆனால் இந்த திருமணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதெல்லாம் இல்லாத குறையை ஒரு சாப்பாட்டு நேரத்தில் மாப்பிள்ளையும், பெண்ணும் சேர்ந்து தீர்த்துவைத்துவிட்டனர்.

   இங்கே டைனிங் ஹாலில் உணவு விருந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது கல்யாணப் பெண், மாப்பிள்ளையை கூப்பிட்டு அதோ பாருங்க என தூரமாக இருக்கும் ஏதோ ஒன்றைக் காட்டுகிறார். உடனே மாப்பிள்ளையும் திரும்பி பார்க்கிறார். அங்கு எதுவுமே இல்லை. மீண்டும் அவர் குனிந்து இலையைப் பார்த்தபோதுதான் இலையில் இருந்த போண்டாவை தன் பொண்டாட்டி சுட்டிருப்பது தெரியவந்தது. 

ஆனாலும் மனம் தளராத மாப்பிள்ளை, மீண்டும் தன் பொண்டாட்டியிடம் இருந்து அந்த போண்டாவை வாங்கிவிட்டார். இந்தக் காட்சிப் பார்க்கவே செம க்யூட்டாக இருக்கிறது. டேனியல் ராஜ் என்பவர் இதைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது இப்போது வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்களேன்…