ஒரு நொடியில் உயிர் தப்பிய பாட்டி… டிரைவர் சாமர்த்தியத்தைப் பாருங்க…!

                 கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். 

        சாலை விபத்து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது.இங்கே ஒரு விபத்து தவிர்ப்புக் காட்சி  சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவில்_தாழக்குடி சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தன் ஆட்டுக்குட்டியை பிடிக்க வந்த பாட்டி ஒருவர், கால்தவறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக அரச்ப்பேருந்தை ஓட்டிவந்த டிரைவர் மிகவும் சாமர்த்தியமாக சடர்ன் பிரேக் போட்டார். இதில் மயிரிழையில் பாட்டி உயிர் தப்பினார். இந்த அரச்ப் பேருந்து ஓட்டுனரின் திறமை இணையத்தில் வேற லெவலில் பேமஸ் ஆகிவருகின்றது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.              

https://youtube.com/watch?v=FV_-B3IfgvA