அப்பா அம்மா ஆகபோகிறோம்…. ஆனந்த கண்ணீரில் பாடலாசிரியர் சினேகன் போட்ட பதிவு…

பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலம் ஆனவர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல எதிர் கமெண்ட்ஸ் இருந்த போதிலும், இறுதி வரை இருந்து போராடி வென்றவர். பிக் பாஸ்-ல் இருந்து வெளியே வந்த பிறகு “மக்கள் நீதி மையம்” கட்சியில் இணைந்தார்.


இவரது மனைவி சின்னத்திரையில் நடித்திருக்கும் கன்னிகா ஆவர். 8 வருட காதலின் பிறகு கடந்த 2021 ல் தான் இவ்ர்கள் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகே மனைவி கன்னிகாவுடன் இவர் சோசியல் மீடியாவில் அதிகம் தென்பட ஆரம்பித்தார்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று கன்னிகா மற்றும் சினேகன் அவர்கள் ஆனந்த கண்ணீருடன் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளனர். அதில் “நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று இன்னொரு உயிர் தானடி” என்றும் “ஐ லவ் யூ அப்பா” என்ற வரிகளோடு குழந்தை படத்தை வரைந்து சினேகனை அழைத்து அதை காட்டுவதோடு, ப்றேக்னேன்சி கிட்டயும் காட்டுகிறார்.


நாங்கள் அப்பா அம்மா ஆக போகிறோம் என்ற caption யும் வீடியோவில் பதிவிட்டுள்ளனர். இந்த மகிழ்ச்சியான வீடியோவை பார்த்து அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

You may have missed