இறைவனடி சேர்ந்த ரத்தன்டாடா-வை நினைத்து… மனமுருகிய ரஜினிகாந்த்…

0

நேற்று தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ்-ன் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மருத்துவமனையில் உயிரிழந்தார் . 86 வயது ஆன இவர் ரத்த அழுத்தம் காரணமாக பாம்பையில் உள்ள ப்ரீச் கேண்டி என்னும் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறப்பு பல தொழிலாளர்கள் மற்றும் பல குடும்பங்களை பாதித்துள்ளது. இதனை பற்றி ரஜினி அவர்கள் மனமுருகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டாடா வின் தலைவராக 21 ஆண்டுகள் இருந்தவர் இவர். தொழிலதிபராக இருந்து பல இளைஞர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். பல குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளார். இவர் நேற்று இறந்த நிலையில் இவரது உடலுக்கு மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் மற்றும் ரிலையன்ஸ் குடும்ப தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்ட பதிவில் இந்தியாவை தொலைநோக்கு பார்வையிலும் தனது ஆர்வத்தினிலும் உலகவரைபடத்தில் இடம் பிடிக்க வைத்தவர் இவர். பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான பேர்க்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தவர் ஏல்லாராலையும் நேசிக்கப்பட்ட மனிதர். இவரை நான் என்றென்றும் போற்றுவேன். இவரை போன்று இந்தியாவின் இன்னொரு உண்மையான மகன் இல்லை என உருக்கமுடன் தனது எக்ஸ்
பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *