மெட்டி ஒலி சீரியல் புகழ் வனஜாவா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க… என்ன செய்கிறார் தெரியுமா?

   90 ஸ் கிட்ஸ்களின் பேவரட் சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. அதில் வரும் டைட்டில் சாங்கான அம்மி, அம்மி, அம்மி மிதித்து பாடல் செம ஹிட். அந்த பாடலுக்காகவே சீரியல் பார்க்கும் கூட்டமும் இருந்தது. அந்த சீரியலின் டைட்டில் பாடலில் ஆடிய சாந்தி அனைவரது மனதிலும் தங்கிவிட்டார்.

  மெட்டி ஒலி சீரியலை திருமுருகன் இயக்கி இருந்தார். இவர் எம் டன் மகன் என்னும் படத்தையும் பரத்தை வைத்து இயக்கி இருந்தார். இந்தப்படமும் மெகா ஹிட்டானது. ஆனாலும் திருமுருகனுக்கு சீரியல் மீதே நாட்டம் அதிகம். மெட்டி ஒலி சீரியல் சன் டிவியில் செம உச்சத்துக்கு போனது. இதில் சகோதிரிகளில் ஒருவராக வந்தவர் வனஜா. ஆரம்பத்தில் விஜய் டிவி மூலமே இவர் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.

  இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்பு பேட்டி கொடுத்துள்ளார் வனஜா அதில் அவர், “எனக்கு விஜய் டிவி அறிமுகம் கொடுத்தாலும், சன் டிவியின் மெட்டி ஒலி மூலம் தான் பேமஸ் ஆனேன். டைரக்டர் ஹரி சிங்கம் படத்தில் வாய்ப்புக்கொடுத்தார். அதில் நெகட்டிவ் ரோல் என நடிக்கும் நொடி வரை தெரியாது. நடிக்கப் போனதும்தான் தெரியும்.  ஹரியிடம் இணை இயக்குனராக இருந்தவரைத்தான் கல்யாணம் செய்து இருக்கிறேன். அந்தப்படத்தில் பழக்கம் ஏற்பட்டுத்தான் என் வீட்டில் வந்து பெண் கேட்டார்கள். கர்ப்பமான பின்பு தான் சீரியலுக்கு பிரேக் எடுத்டேன்.”எனச் சொல்லியுள்ளார். இப்போது அம்மணிக்கு தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட  ஒரு மகளும் உள்ளார். வனஜாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.