கீழே விழுந்தும் தன்னம்பிக்கையுடன் நடனமாடிய குஷ்பு… கரகோஷம் எழுப்பிய கேரள சின்னத் திரை நடிகர்கள்…

0

90s கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் அனைத்து இளைஞர்கள் மனதிலும் கனவு கனியாக இருந்தவர் தான் குஷ்பு. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 90s காலத்தின் முன்னணி நடிகரான சத்யராஜ், ரஜினி, கமல்காஷன், பிரபு போன்ற எல்லா ஹீரோ உடனும் நடித்து தன் திறமையை காட்டியவர்.


இவர் ரசிகர் மத்தியில் குஷ்பு இட்லி என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டத்துடன் மட்டுமின்றி இந்த பெயரில் இன்றும் வியாபாரிகள் கடைகள் நடத்துகின்றனர். இப்போது இவர் டைரக்டர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ளார்.


கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டி சம்பவத்தின்போது , குஷ்பு அவர்கள் எங்கள் காலத்தில் கேரவேன் எல்லாம் கிடையாது .ஒப்பனை கலைஞர்கள் நன்கு பக்கமும் துணி பிடிக்கவே நாங்க உடை மாத்தி உள்ளோம். அந்த அளவு அவர்கள் நம்பிக்கை கொடுத்தார்கள் என்றும் கூர்யுள்ளார்.


இதைத்தொடர்ந்து தற்போது கேரளா சின்னத்திரை நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட குஷ்புவை ஆங்கர் ஒருவர் நடனமாட சொல்லியுள்ளார். இதனால் நடனமாடிய குஷ்பு அவர்கள் மூட்டு வலியால் கீழே விழுந்ததால் ஒருநிமிடம் அரங்கமே அதிர்ந்தது. உடனே குஷ்பு அவர்கள் எனக்கு முன்பே மூட்டு வலி உள்ளதாகவும் இதனால் யாரும் வருத்தப்பட்டு நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டாம் எனவும் கூறி மீண்டும் நடனமாடியுள்ளார் .


இதைப்பார்த்து அங்கே இருந்த சின்னத்திரை நடிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர். இப்படி தன்னம்பிக்கையுடன் ஆடிய குஷ்பு அவர்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களால் பாராட்டப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed