கோலங்கள் சீரியல் ஆனந்தியா இது…! முடியை இழந்தது எதற்காக…! அனைவரையும் நெகிழ வைத்த நடிகை மஞ்சரி…!

0

90s காலகட்டத்தில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல் தான் கோலங்கள். இது மிகவும் பிரபலமான சீரியல் இதற்கென்று ஒரு கூட்டம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மக்களால் பேசப்படும் முக்கியமான சீரியல் தான் கோலங்கள். இந்த சீரியலில் நடிகை தேவயாணி கதாநாயகியாக நடித்திருப்பார். சினிமாவில் மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கோலங்களில் தேவயானிக்கு தங்கையாக ஆனந்தி என்னும் பெயரில் நடித்திருப்பவர் நடிகை மஞ்சரி. இவர் கோலங்கள் மற்றும் புகழ் பெற்ற அண்ணாமலை மற்றும் மந்திரவாசல் சீரியலிலும் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் திடீர்ரென நடிப்பதை நிறுத்தி விட்டார் காரணம் அவர் சிங்கப்போரில் இருந்தார். நடிப்பதற்காக தினமும் சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மேலும் அவர் கர்ப்பம் ஆன உடன் தினமும் விமானத்தில் வர முடியாது என்பதால் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதன் பிறகு அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிப்பதற்கு வந்தார்.

இந்நிலையில் நடிகை மஞ்சரியின் தற்போதைய போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதற்க்கு பேட்டி ஒன்றில் காரணம் கேட்ட தொகுப்பாளரிடம் சிங்கப்பூரில் கேன்சர் சொசைட்டி ஒன்றில் தானமாக மக்கள் அனைவரும் முடியினை கொடுப்பார்களாம். அந்த முடியினை விக் செய்து கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைப்பார்களாம். அதனால் இவரும் வருடத்திற்கு ஒருக்கால் தன்னுடைய முடியை கேன்சர் சொசைடிக்கு தானம் செய்து வரலாம் என்று முடிவு செய்து குடுத்து வருகிறாராம். இவரின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed