இந்த தாத்தாவுக்கு இருக்கிற சந்தோஷத்தை பாருங்க… பேர குழந்தைக்கு உணவூட்ட குழந்தையாகவே மாறிய தாத்தா…

காலத்தால் அழியாத சொத்துக்களில் ஒன்று தான் தாத்தா பாட்டி உறவு. என்னதான் தன்னுடைய பிள்ளைகள் மீது பாசம் இருந்தாலும் பேர குழைந்தைகள் என்று வரும் பொழுது அந்த குழந்தைகள் மீது காட்டும் அன்புக்கோ அளவே கிடையாது. ஒரு பொக்கிஷமான உறவு தான் தாத்தா பாட்டி உறவு. தனக்கு 90 வயதானாலும் தன்னுடைய பேர பிள்ளைகளுக்காக எதும் செய்ய வேண்டும் என்றால் 25 வயதானவர்கள் போல் துள்ளி குதிப்பார்கள்.


தன்னுடைய பேர பிள்ளைகளோடு இருந்தால் அவர்களுக்கு முதுமை என்ற ஒன்றே மறந்துவிடும். பேர பிள்ளைகள் தான் அவர்கள் உலகம் என நினைத்து துள்ளி குதிப்பார்கள். அந்த வகையில் இந்த காணொளியில் ஒரு தாத்தா தன்னுடைய பேர பிள்ளைக்காக செய்வதை பாருங்கள்.


தன்னுடைய பேர பிள்ளை சாப்பிட வேண்டும் என்பதற்க்காக பாட்டி உணவு ஊட்ட தாத்தா நடனம் ஆடி குழந்தையை சாப்பிட வைப்பதை பாருங்கள். இத்தனை வயதிலும் தன்னுடைய பேர குழந்தையின் மகிழ்ச்சிக்காக இந்த தாத்தா நடனம் ஆடுகிறார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த தாத்தாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

You may have missed