லட்டு விஷயத்தில் நடிகர் கார்த்தியை கிண்டல் செய்த சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன்..

0

தற்போது மிகவும் வைரலாக போய் கொண்டிருக்கிறது திருப்பதி லட்டு விவகாரம் . பெரும் குற்றம் ஏற்பட்டதாக அதை ஈடுகட்டும் வகையில் பல பூஜைகள் , ஹோமங்கள் , தோஷ கழிப்புகள் நடத்துகின்றனர் .


இத்தகைய நிலையில் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் மெய்யழகன் படப்ரோமோஷனல் விழாவில் லட்டை குறித்து கேலி செய்ததாக கார்த்தியை பவன் கல்யாண் கண்டித்து பேசி இருந்தார் . இது மிகவும் வைரலானா நிலையில் கார்த்தியும் சற்றும் யோசிக்காமல் மன்னிப்பு கேட்டார் .


ஆனால் பவன் கல்யாண் கோவத்திற்கு காரணமானவர் பிரகாஷ்ராஜ் தான் . பவன் கல்யாணின் பத்திரிக்கை சந்திப்பை பார்த்து பிரகாஷ்ராஜ் அவரின் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் . பவன் கல்யாணின் இந்த தவறான புரிதலுக்கு நேரில் விளக்கமளிக்குறேன் என்றிருக்கிறார் . லட்டு பற்றி விமர்சித்த பிரகாஷ்ராஜை விட்டுவிட்டு கார்த்திக்கு கண்டனம் கொடுத்துள்ளார் பவன் கல்யான் .


இதை சிறிதும் யோசிக்காமல் நம்மளை தன டார்கெட் செய்கிறார்கள் என்று மன்னிப்பு கேட்ட கார்த்தியை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் வடிவேல் காமெடியுடன் இணைத்து இவரும் மன்னிப்பு கேட்டார் அவரும் மன்னித்து விட்டார் என பேசி இருக்கிறார் . மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களாக இருந்திருந்தால் கட்டாயம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் .


மேலும் பாஹுபலி படத்தில் காவேரி பற்றி பேசியதாக நடிகர் சத்தியராஜ் மன்னிப்பு கேட்டிருந்தார் . இன்று கார்த்தி கேட்டுள்ளார் . தன் படம் எப்பிரச்சனையும் இன்றி ஓட வேண்டுமென தமிழன் எனும் மரியாதையை விட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் என ப்ளூ சட்டை மாறன் கார்த்தியை விமர்சித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *