பிக் பாஸ் சீசன்8 ஆண்களை குற்றம் சாட்டி கடுமையாக தாக்கி பேசிய மாயா….

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிக் பாஸ் குறித்து பிரபலங்கள் விமர்சையாக பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ் வரிசையில் தற்போது நடிகை மாயா கிருஷ்ணனும் பிக் பாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இதுவரையில் இல்லாத வகையில் பிக் பாஸ்ல் ஆண்கள் பெண்கள் என இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த சீசன் வரை ஆணும் பெண்ணும் சமமாக சேர்ந்து தான் விளையாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த பிக் பாஸ்ல் பிரதீபால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல பெண்கள் கூறவே இந்த முறை ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரித்து விளையாடுகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் சீசன் 8 ஆண்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது பெண்கள் தான் சமையல் செய்யவேண்டும் பாத்திரம் கழுவ வேண்டும் என ஆண்கள் பிளான் போட்டு கொண்டிருக்கிறார்கள். அதனை பார்க்கும் பொழுது பெண்கள் அடிமையா என்று நினைத்து பயங்கரமாக கோவம் வருவதாக கூறியுள்ளார். மேலும் ஆண்களின் இந்த செயல் கஷ்டமாக இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் வீட்டில் இருப்பதில் ஜாக்கிளின் சிறப்பாக விளையாடுவதாகவும் ஆண்கள் அணியில் முத்துக்குமார் உட்பட பலர் சுயநலமாக விளையாடுவதாகவும் எனக்கு தெரிந்த வகையில் கானா பாடகர் ஜெபிரின் இயல்பாக விளையாடுவதாகவும் தன்னுடைய விமர்சனத்தை நேரடியாக கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed