வளைக்காப்பில் சந்தோஷத்தில் கண் கலங்கிய கன்னிகா மற்றும் சினேகன்..!

0

பிக் பாஸ் சீசன் 1ல் ஒரு போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் சினேகன். இவருக்கு நிகழ்ச்சியின் மூலம் பல எதிர் கமெண்ட்ஸ் இருந்த போதிலும், இறுதி வரை போராடி வென்றவர். பிக் பாஸ்-ல் இருந்து வெளியே வந்த பிறகு மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார் இவர்.இவர் தமிழ் சினிமாத்துறையில் முன்னணி படலாசிரியர்களுள் ஒருவராக இருக்கிறார்.இவரின் முதல் பாடல் பாண்டவர் இல்லம் படத்தில் வெளிவந்தது.

இவரது மனைவி கன்னிகா அவர்கள் சின்னத்திரையில் நடித்திருக்கும் ஒரு நட்சத்திரம் ஆவர். 8 வருட காதலின் பிறகே இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு தான் மனைவி கன்னிகாவுடன் சினேகன் சோசியல் மீடியாவில் அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இவரது பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட கன்னிகா அவர்கள் கருத்தரித்ததை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் . அதில் அவர் “நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று இன்னொரு உயிர் தானடி” என்றும் “ஐ லவ் யூ அப்பா” என்ற அன்பு மிகுந்த வரிகளோடு குழந்தை படத்தையும் வரைந்து சினேகனை அழைத்து அதை காட்டுவதோடு, ப்றேக்னேன்சி கிட்டயும் காட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது கன்னிகா அவர்களுக்கு 5 வது மாதம் வளைகாப்பு நடந்துள்ளது.இதில் ஆனந்த கண்ணீருடன் சினேகன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *