டோலிவுட்டையே அதர விட்ட புஷ்பா-2 போஸ்டர்…இன்னும் 50 நாளில் வெளிவர இருக்கும் புஷ்பா-2…

0

2021 ஆம் ஆண்டு வெளிவந்து திரையரங்குகளை கலக்கி மிக பெரிய வெற்றி படமாக திகழ்ந்ததுதான் அல்லு அர்ஜுன்,ராஷ்மிக்கா மந்தனா மற்றும் பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த புஷ்பா.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்தது. படம் முடிவிலே அடுத்த பாகத்திற்கான க்ளூ கொடுத்துவிட்டே சென்றனர்.இந்நிலையில் புஷ்பா-2 டிசம்பர் 6ஆம் தேதி வெளியாக போகிறது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது.

இப்படம் முதல் பாகத்திலே 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.இந்தியாவை தாண்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் அவர் குடும்பத்துடன் இப்படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் செய்தது மிக வைரல் ஆகியது.இதனால் புஷ்பா படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் உலகளவில் கூடியது.

இந்நிலையில் முதலில் புஷ்பா-2 அக்டோபர் 17-ஆம் தேதி வெளிவர போவதாக படக்குழுவினர் கூறியநிலையில் இப்பொது இன்னும் புஷ்பா-2 விற்கு 50 நாளே உள்ளது என வெளிட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து இதில் அல்லு அர்ஜுன் செம்மரங்கள் வெட்டி கடத்துவதுபோல் வந்திருக்கும்.இதற்கு முதல் பாகத்திலே வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து கண்டனம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *