ரெட் அலர்ட் இல்ல எந்த அலர்ட் வந்தாலும் விஜய் டிவிக்கு நோ லீவ்… சலிப்பாக பேசிய அறந்தாங்கி நிஷா…!

0

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா. இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலமாக விஜய் டிவியில் வந்தவர். மக்களை சிரிக்க வைப்பதன் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதாவது மழை வந்தால் ஸ்கூல் காலேஜ்கு எல்லாம் லீவு விடுறாங்களா. இந்த விஜய் டிவிக்கு மட்டும் லீவு கிடையாதா. ரெட் அலெர்ட் அறிவிப்பு வந்தாலும் விஜய் டிவிக்கு அது விளையாட்டாக போய்விட்டது என சலிப்பாக காமெடியக பேசி உள்ளார்.

அதே சமயம் வெளியில் வந்து மழை பெய்து. அதனால் கார் இன்னும் வரவில்லை என்று அவர் நினைக்க அந்த டைம் பார்த்து எதிரில் நிற்பவர் கார் வந்து அரை மணி நேரம் ஆகி விட்டது. என்று சொல்ல சரி போவோம் இல்லை என்றால் சோத்துக்கு என்ன பண்றது என்று சலிப்புடன் கிளம்பி செல்கிறார். மேலும் அவர் மக்களை பார்த்து எல்லாரும் கவனமாக இருக்க வேண்டும். எனவும் தேவையான பொருட்களை எல்லாரும் வாங்கி வைத்து கொள்ளுங்கள் எனவும். இதுவும் கடந்து போகும் எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed