இப்படியும் கிண்டல் செய்வார்களா… மன வருத்தத்துடன் பேசிய பிக் பாஸ் ரஞ்சித்தின் மனைவி…

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் பிக் பாஸ் குறித்து பிரபலங்கள் விமர்சையாக பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ் வரிசையில் நடிகை மாயா கிருஷ்ணனும் பிக் பாஸ் விமர்சனம் செய்துள்ளார்.மேலும் இதுவரையில் இல்லாத வகையில் பிக் பாஸ்ல் ஆண்கள் பெண்கள் என இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த சீசன் வரை ஆணும் பெண்ணும் சமமாக சேர்ந்து தான் விளையாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த பிக் பாஸ்ல் பிரதீபால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல பெண்கள் கூறவே இந்த முறை ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரித்து விளையாடுகிறார்கள்.

இந்நிலையில் 90s கலகட்டத்தில் வில்லன் ஆக நடிப்பில் ரசிகர்கக்ள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ரஞ்சித். இவர் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர். மேலும் இவரது மனைவி பிரியா ராமனும் 90s காலகட்டத்தில் பெரிய நடிகை.இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கு கொண்டு உள்ளார். தற்போது ரஞ்சித்தின் மனைவி அவரின் பிக் பாஸ் விளையாட்டை பற்றி பேசுகையில் வீட்டிற்குள் ரஞ்சித் பேசும்போது சிலர் அவரை கிண்டலாக பேசுகிறார்கள்.

அவர்கள் ரஞ்சித்தை கிண்டலாக பேசவில்லை மாறாக இந்த சமூகத்தை கிண்டலாக பேசுகிறார்கள் என்று பல பேர் என்னிடம் சொல்லி வருத்த படுவதாகவும். அவர் உங்களுடைய பிரதிநிதியாக தான் சென்றிருக்கிறார். பொருத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கும் என்று அப்படி சொல்லி இருப்பதாகவும் மேலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து மனம் உடைந்தும் பேசியுள்ளார். அவர் பேசிய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .மேலும் அவரது ரசிகர்கள் ரஞ்சித் குறித்து பாசிட்டிவ் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed