ரெட் அலெர்ட் எச்சரிக்கை… ஒரு சில மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… எந்தெந்த மாவட்டங்கள்…

0

தமிழகத்தில் மழை சீசன் தொடங்கியது. வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஆரம்பமாக நேற்று முதலாகவே சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மிக கன மழை பெய்ய கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *