வேட்டையனில் ரஜினியின் நடிப்பை புகழ்ந்து தள்ளிய கார்த்திக் சுப்புராஜ்….

0

ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் நேற்று வெளியாகிய நிலையில் தனுஷ்-ல் இருந்து விஜய் வரை பல பிரபலங்கள் பார்த்து ரசித்து உள்ளனர் . ஜெய் பீம் படத்தை இயக்கிய அதே இயக்குனர் ஞானவேல் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், விருமாண்டி அபிராமி, துஷாரா விஜயன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் தான் ஞானவேலும் ரஜினிகாந்த் அவர்களும் முதன் முறையாக இணைந்துள்ளனர். ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளது வேட்டையன் படம். ரஜினி அவர்களுக்கு என சில சிறப்பு காட்சிகளை வைத்துள்ளார் ஞானவேல். அனிரூத்தின் பாடல் என்றல் சொல்லவா வேண்டும் அவரின் பாடலும் இதில் இடம் பெறுவதால் ரசிகர்களின் பாராட்டுக்கள் பெருகி கொண்டே இருக்கின்றன. தன்னை கிண்டல் செத்தவர்களுக்கு இவர் தரமான படம் கொடுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்தை பிரபலங்கள் அனைவருமே பாராட்டி வரவேற்கின்றனர். இதை தொடர்ந்து ரஜினி அவர்களின் ஆழ்ந்த ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் படத்தை பார்த்துள்ளார். பின் அவர் பத்திரிகையாளரிடம் ரஜினி அவர்களை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் பத்திரிகையாளர்களிடம் “தலைவர் படம் என்பதால் நான் ரொம்பவே ஆர்வமாக இருந்தேன். நான் அவரை வைத்து இயக்கிய பேட்ட படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஜெயிலர் படம் நன்றாக இருந்தது. தலைவர் ரஜினி குறி வெச்சா தப்பாது” என்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed