குத் வித் கோமாளி சீசன் 5 டைட்டில் வின்னராக அறிவிக்க பட்ட பிரியங்கா… கழுவி ஊத்தும் ரசிகர்கள்…

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றானது குத் விக் கோமாளி. இந்த நிகழ்ச்சியினை அனைத்து தரப்பினரும் விரும்பி பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கென்று பெருமளவு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். குத் விக் கோமாளி சீசன் 4 வரை முடிந்த நிலையில் இந்த ஆண்டு குத் விக் கோமாளி சீசன் 5 தொடங்கப்பட்டது.

சீசன் 5 தொடங்கிய நாளில் இருந்தே சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருந்தன. இப்போது இந்த நிகழ்ச்சியானது சீசன் 5 இறுதி கட்டத்தை நெருக்கி வந்தது. இது வரை வெற்றி கரமாக முடிந்த இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் வெற்றி கரமாகவே முடிந்தது. மேலும் இந்த சீசனில் போட்டியாளராக அஜய் கமல், ஷாலின் சோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடுபேர் இர்பான், திவ்யா துரைசுவாமி, தொகுப்பாளினி பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜாதா கலந்து கொண்டனர்.


மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்சிதா, ஷப்னம், கெமி ஆகியோர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் சின்ன சின்ன மனஸ்தாபங்களும் ஏற்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிகழ்ந்த நிலையில் பைனல் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த சீசன் 5 டைட்டில் வின்னர் தொகுப்பாளர் பிரியங்கா என அறிவிக்கப்பட்டது. இந்த செய்தியை கேட்டு கடுப்பான ரசிகர்கள் அவருக்கு எதிராக நெகடிவ் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

You may have missed