ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தேன்டா… அறந்தாங்கி நிஷா வேதனை பதிவு..!

விஜய் டிவியின் முக்கிய பிரபலங்களில் ஒருவரான அறந்தாங்கி நிஷா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக விஜய் டிவியில் அறிமுகம் ஆனவர். ஒரு பெண்ணாலும் சாதிக்க முடியும் என்று காட்டியவர். கருப்பு, குண்டு என அவருக்கு இருக்கும் மைநெஸ்யும் ப்ளேஸ்ஸாக மாற்றி அனைவரையும் அவருடைய நகைச்சுவையில் ஈர்த்தவர். இவருக்கு என்று ரசிகர்கள் அதிகம்.


மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராமர் வீடு, மிஸ் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, குத் விக் கோமாளி, போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து உள்ளார். சின்னத் திரையில் கலக்கி வந்த இவர் சின்னமா விற்குள்ளும் அடியெடுத்து வைத்தார்.
மாரி 2 படத்தில் சாய் பல்லவிக்கு தோழியாக ஆட்டோ ஓட்டுநராக வந்தார். அதே போல ஆண் தேவதை, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ராயன் போன்ற படத்திலும் நடித்துள்ளார்.


இப்படி சின்னத் திரையிலும் சினிமாவிலும் பிஸியாக இருக்கும் நிஷா விஜய் டிவியில் இருந்து விலகிவிட்டார் என போஸ்ட் ஓன்று இணையத்தில் வந்துள்ளது. ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையில் நடக்கும் சண்டை மக்கள் மத்தியில் பிரபலங்களுக்கும் இந்த மாதிரி ஈகோ, பாலிடிக்ஸ் பிரச்சனைகள் நடக்குமா என்கின்ற கேள்வி இருக்கின்றது. இந்த நிலையில் நிஷா விலகிவிட்டார் என்ற போஸ்ட் பார்த்து ரசிகர்கள் அதிர்சிக்குள்ளாகினர்.


மேலும் இந்த போஸ்ட் பார்த்த நிஷா “யாரு பார்த்த வேலைடா சாமி இது…. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தேன்டா…. உங்களால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டீங்க hiyooo….” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனை அடைந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அப்போ விலக்கலயா நாங்க நம்பிட்டோம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

You may have missed