வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகர் வரிசையில் விஜய் ஆன்டனி…

0

வெள்ளித்திரை விட சின்னத்திரையை பெரும்பாலும் மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் கவனத்தை இழுக்கும் வகையில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல் சின்னத்திரையை கொண்டாடவைக்கிறது.


இதனாலவோ என்னவோ வெள்ளித்திரை பிரபலம் பலர் சின்னத் திரையை விட்டு வெள்ளித்திரை நோக்கி நிகழ்ச்சி ஆங்கரிங் செய்யவும் நடுவராக இருக்கவும் செல்கின்றனர். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாஷன், விஷால் இவ்ர்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக மிரள வைத்து கொண்டிருக்கின்றனர்.


இதனைத்தொடர்ந்து சின்னத்திரை ஷோவ்வின் நடுவராக வர உள்ளார் விஜய் ஆன்டனி. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஒப்பிடும்போது பல சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் டிஆர்பி யில் முதலிடம் உள்ளது ஜீ தமிழ். டீஆர்பி யில் முதலிடம் வகிக்கும் ஜீ தமிழில் மகா நடிகை என ஒரு ரியாலிட்டி ஷோ வர உள்ளது.
இதில் விஜய் ஆன்டனி நடுவராக பங்கேற்க உள்ளாராம். இதை தொடர்ந்து சரிதா மற்றும் அபிராமி அதே நிகழ்ச்சியில் நடுவராக வர இருப்பதாக தகவல்
கசிந்துள்ளது. அந்த ப்ரோமோ வில் விஜய் ஆன்டனி பேசுவது மக்களை ஈர்த்துள்ளது.


அதில் அவர் ஆடியன்ஷிடம் உன் வாழ்க்கையில் எதை அடைய நினைத்தாலும் நீ உன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் போது அது நடக்கும் நடந்தே தீரும் என்பதில் சந்தேகம் தேவை இல்லை . உன் எண்ணம் எவ்வளவு பெரிதோ உன் வாழ்க்கையும் அவ்வளவு தூரம் பெரியதாக பயணிக்கும் .
எனவே எப்போதும் மனதை உறுதியாக வை என்று மோட்டிவேஷனாக கூறியுள்ளார் சமீபத்தில் இது இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை இழுத்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *