மனைவி ஆர்த்தி ஏற்படுத்திய சலசலப்பு முடித்து வைத்த ஜெயம் ரவி…! ஆர்த்தி மீது போலீசில் புகார்…!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இவருக்கும் அவரது மனைவிக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருபெரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீர்யென இருபெருக்கும் இடையில் கருத்து வேறுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் சேர்ந்து பேசி பரஸ்பரமாக பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதற்கான அறிவிப்பை ஜெயம் ரவி அறிவித்திருந்தார் ஆனால் மனைவி ஆர்த்தியோ என்னுடைய விருப்பம் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என ஆர்த்தி ரவி மீது குற்றம் சாட்டியுள்ளார்.


இந்நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆர்த்தி ஜெயம் ரவி பிரிவதற்கு ஆர்த்தி ஜெயம் ரவி மீது கொண்ட சந்தேகமே காரணம் என பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இப்படி பிரச்சனை சென்று கொண்டிருக்கும் பொழுது ஜெயம் ரவி கோவாவை சேர்ந்த பாடகி ஒருவருடன் டேட்டிங்க் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களின் நெருக்கம் தான் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி பிரிவதற்கு காரணமாக இருக்குமோ என்று ஊடகங்கள் தகவல் எழுப்ப அதற்க்கு மறுப்பு தெரிவித்து உள்ளார் ஜெயம் ரவி .


இந்நிலையில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது போலிசில் புகார் அளித்துள்ளார். “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்” அமைந்துள்ள ஆர்த்தியின் வீட்டில் தன்னுடைய உடைமைகள் இருப்பதாகவும் அதனை அவர்கள் தராமல் இழுத்தடிப்பதாகவும் அதனை மீட்டு தரும் படியும் “அடையாறு துணை ஆணையர்” அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயம் ரவி இவ்வாறு புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *