மனைவிக்குத் தெரியாம்ல் மூன்று வருசமாக கணவர் செய்த வேலை.. விஷயம் தெரிந்து மனைவி கொடுத்த ஸ்வீட் ரியாக்சன் தெரியுமா…!

கணவன், மனைவிபாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த பாசத்தின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர்.

   ஆனால் கணவன், மனைவி உறவு என்பது முழுக்க அன்பால் மட்டுமே கட்டுப்பட்டது. அதற்கு பணம், காசு இருக்கிறதா என்னும் கவலையோ அல்லது,  அழகோ ஒரு விசயமே இல்லை. அதை உணர்ந்து கொண்டவர்கள் வாழ்வு வரமாகி விடுகிறது. இங்கேயும் அப்படித்தான் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்திருந்தார். அவரது காதல் மனைவியோடு அவர் கைகோர்த்து முழுதாக 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் பெயர் கென். 

   அவர் தன் மனைவியின் பிறந்தநாளுக்கு ஒரு கிப்ட் கொடுக்க நினைத்தார். இதற்காக அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் சர்ப்ரைஸாக ஒரு கிப்ட் கொடுக்க நினைத்தார். அது மூன்று வருடங்களாக கட்டி எழுப்பப்பட்ட கிப்ட். அட. ஆமங்க…அது அழகான வீடு. மனைவிக்குத் தெரியாமல் கென் என்னும் அந்தக் காதல் கணவர் மூன்று ஆண்டுகளாகப் பார்த்து, பார்த்து இந்த வீட்டைக் கட்டியுள்ளார். அதிலும் இந்த வீட்டில் லிப்ட் உள்பட சகலவசதிகளும் இருக்கிறது. அது ஒரு மூன்று மாடிக் கட்டிடமும் கூட! 

          இந்த வீட்டுக்கு தன் மனைவியின் கண்களைப் பொத்தி அழைத்துவந்து காட்டுகிறார். இதைப் பார்த்த காதல் மனைவி சர்ப்ரைஸில் மூழ்கிப் போகிறார். இதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கென் கூடவே நெகிழ்ச்சியான ஒரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார். அதில், “கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை பாரிமுனை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல் வைத்து நம் கல்யாணம் நடந்தது. அப்போது மாற்றுத்துணி வாங்கிக்கொடுக்க கூட வசதி இல்லை. ஒருநாள் நீ பசிப்பதாகச் சொன்னாய். நான் 4 மணிக்கு தயிர்சாதம் வாங்கிவந்தேன். ஆனால் அதுவும் கூட புளித்துவிட்டது. இப்போது நாம் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.”என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு செம வைரல் ஆகிவருகிறது.