குடும்ப கஷ்டத்திற்காக கவலைப்பட்ட மனிதன்… மடியில் படுக்க சொல்லி ஆறுதல் சொன்ன குரங்கு..!

     மனிதர்களை போல மிருகங்களுக்கு உள்ளும் மிகப்பெரிய மனிதத்தன்மை உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் குரங்கு ஒன்றின் செயல் அமைந்துள்ளது. அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

       குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும். அதேநேரத்தில் குழந்தைகள் சேட்டை செய்யும் போது உனக்கு இன்னும் வால் மட்டும் தான் முளைக்கல எனவும் சொல்வதைக் கேட்டிருப்போம்.

                          அந்த அளவுக்கு மனிதன், குரங்கு இருவரும் ஒத்த தன்மையைக் கொண்டவர்கள் தான். மனிதனுக்கு ஆறு அறிவு. குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையே. ஆனால் இப்போதுகுரங்குக்கும் ஆறு அறிவு இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா?

  வீட்டில் நாய், பூனை வளர்ப்பதைப் போல் ஒருவர் செல்லமாக குரங்கு ஒன்றை வளர்த்துவந்தார். அந்த  குரங்கிற்கு மனிதர்களைப் போலவே சட்டை, பேண்டெல்லாம் போட்டு அழகுபார்க்கிறார். குரங்கை வளர்க்கும் எஜமான் ஒருநாள் சோகத்தில் அயர்ந்து போய் அமர, அந்தக் குரங்கோ அவரை அரவணைத்து சமாதானப்படுத்துகிறது. தன் மடியில் அவரைப் படுக்கவும் வைத்துக் கொள்கிறது. இதோ இவ்வளவு அருமையான குரங்கா? என நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். இதோ நீங்களே பாருங்களேன்.