13 வருடங்களுக்கு பின்பு மீண்டும் தாயான சீரியல் நடிகை நீலிமா… என்ன அழகான குடும்பம் பாருங்க… குழந்தை புகைப்படமும் இதோ..!

   தமிழ் திரையுலகில் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நீலிமா. இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் கலக்கி வருகிறார். தமிழில் 50 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 30க்கும் அதிகமான படங்களில் சிறு,சிறு ரோல் செய்திருக்கிறார். 

     அதிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நீலிமாவின் ரோல் வெகுவாகப் பேசப்பட்டது. வாணிராணி, செல்லமே என பல சீரியல்களில் நடித்திருக்கும் நீலிமா, இப்போது அரண்மனைகிளி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தனியாகவே ஒரு சீரியலை தயாரித்தும் வருகிறார். அது இப்போது 500 எபிசோடுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீலிமாவுக்கு சினிமா மூலம் முன்னேறியவர்.

      நான் மகான் அல்ல படத்தில் நடித்ததற்கு நீலிமாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்யும்போது இருபது வயதே ஆகியிருந்தது. இந்த தம்பதிக்கு இசை என்ற மகள் ஏற்கனவே உண்டு. இந்நிலையில் நீலிமா கருவுற்றிருந்தார். அவர் அப்போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அம்மணி, 13 வருடங்களுக்குப் பின்பு, மீண்டும் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

  இப்போது இணையத்தில் முதன் முறையாக தன் இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே நீலிமாவின் இரண்டாவது குழந்தையா இது? என ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இவர்களின் குடும்பப் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

pic1

pic2