மணமேடையில் குழம்பிப் போய் மாப்பிள்ளை செய்த செயல்… ஷாக்காகி போன மணப்பெண்.. என்னனென்ன பண்ணுராருன்னு பாருங்க…!

திருமண வீட்டில் மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று இணையத்தில் வேற்ர லெவலில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த வழக்கமான கொண்டாட்டங்களை எல்லாம் ஓவர்டேக் செய்யும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வழக்கமாக கல்யாணத்திற்கு மணப்பெண் தான் டென்ஷன் ஆவார். ஆனால் இங்கே மாப்பிள்ளை ரொம்பவே பதட்டம் ஆகிவிட்டார். மாப்பிள்ளையின் கையில் தாலியை எடுத்துக் கொடுத்ததும், முதலில் அவர் கழுத்திலேயே அவர் கட்டிக்கொள்ளச் சென்றுவிட்டார். கடைசியில் சுதாகரித்துக்கொண்டு மணப்பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.