மகளுக்கு நடந்த விசேசம்.. மகளைப் பார்த்து கண் கலங்கி அழுத பிரபல சீரியல் நடிகை..!

    முன்பெல்லாம் வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. 

  அதிலும் விஜய் டிவி, சன் டிவிகளில்  சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர்

  அந்தவகையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு மூலம் பேமஸ் ஆனவர்  நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் தொடர்ந்து வைர நெஞ்சம், கஸ்தூரி, இளவரசி, தங்கம், பிரிவோம் சந்திப்போம், மை நேம் இஸ் மங்கம்மா, வாணி ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, அரண்மனைகிளி உள்பட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். புகைப்படக்கலை நிபுணரான அசோக் என்பவரைத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

  தன் செல்ல மகளுக்கு அண்மையில் காது குத்து விழா வைத்திருந்தார். அப்போது, காது குத்துவதைப் பார்த்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் கண் கலங்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன். 

https://youtube.com/watch?v=gwff10h2sW8