பருத்திவீரன் படத்தில் நடித்த குட்டிசாக்கா இது..? அவரது இப்போதைய நிலைதெரியுமா? என்ன வேலை செய்யுறார் பாருங்க…

   தமிழ்த்திரையுலகில் சர்ச்சையிலேயே சிக்காதவர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார். ஆனால் வாலிப வயதிலேயே அப்படி எதிலும் சிக்காதவர் வயதான பின்னர் செல்பியை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

   இவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இதில் சூர்யா, நடிப்போடு மட்டுமல்லாது அகரம் பவுண்டேசன் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கல்விபயிலும் மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும் செய்து வருகின்றார்.. வெளிநாட்டில் படித்துவிட்டு சென்னை வந்த கார்த்தி, பக்கா கிராமத்து சாமியாக பருத்திவீரனில் பட்டையைக் கிளப்பினார்.

  இயக்குநராக ஆசைப்பட்டு மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் பருத்திவீரனின் வெற்றி அவரை சினிமாவின் நாயகனாக்கியது. அமீரின் பருத்தி வீரன் திரைப்படம் இப்போது பல ரசிகர்களின் ஆல்டைம் பேவரட். அந்த படத்தில் குட்டி சாக்கு  என்னும் கேரக்டரில் நடித்தவரும் அப்போது ரொம்ப பேமஸ். 

  இப்போது குட்டிசாக்கு,  புஹாரி ஜங்சன் என்னும் யூ டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். குட்டிசாக்கு கேரக்டர் அந்த படத்தில் பெரிய ஹிட் அடித்தாலும், குட்டிசாக்கிற்கு உசிலம்பட்டி பக்கத்தில் சின்ன கிராமம். குட்டி சாக்கு இப்போது லோடுமேன் வேலை செய்து கொண்டிருக்கிறார். குட்டிசாக்கு படத்தில் நடித்தவருக்கு சொந்த பெயர் விமல்ராஜ். சின்னவயதிலேயே குச்சி குத்தியதால் அவருக்கு ஒருகண் பார்வை போய்விட்டது. இப்போது நடிக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என வேதனையோடு சொல்லும் விமல்ராஜ், தன் கண்ணை வைத்து மக்கள் இன்னும் தன்னை குட்டிசாக்கு என கண்டுபிடிப்பதாகச் சொல்கிறார். அவரது வறுமைநிலை குறித்து ஊடகவியலாளரும், இணை இயக்குனருமான புகாரிக்கு கொடுத்திருக்கும் வீடியோ நேர்காணல் இதோ!…