பட்டம் பூச்சி கூட்டத்திற்கு எதற்கு வேலி….. எவ்ளோ ஆனந்தமாய் மழையில் துள்ளி விளையாடுகிறார்கள் சின்னஞ்சிறு குழந்தைகள்…

சிறிய குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும் நமக்கு, நாமலும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு குழந்தை பருவம் நம்முடைய வாழ்வில் மிகவும் ஒரு முக்கியமான மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

இப்போது நினைத்து பார்த்தால் கூட கண்ணின் ஓரத்தில் நீர் துளிர்க்கும். மீண்டும் அந்த காலம் வரதா என்ற ஒரு வித ஏக்கம் நம்முல் வரும்.

என்ன இருந்தாலும் குழந்தைகளாக இருந்த காலம் சுகம் தான். கவலைகள் அற்ற காலம். மகிழ்ச்சியின் உற்சாகத்தில் விளையாடிய காலம்.

தற்போது பல பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ஏக்கம் அடைய வைத்த சிறு குழந்தைகளின் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து கொண்டு வருகிறது. மழையில் ஆனந்தமாய் துள்ளி குத்தித்தும், அந்த மழை நீரில் அமர்ந்து கொண்டும் விளையாடும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் வீடியோ இணையவாசிகளை, அவர்களுடைய சின்ன வயது ஞாபகங்களை எண்ணிப்பார்க்க வைக்கிறது.