நட்புன்னா இப்படி இருக்கனும்.. மின்னல் வேகத்தில் வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய நண்பனின் கால்.. கடைசியில் நடந்த சம்பவத்த பாருங்க..!

பள்ளிக்கூடத்தில், ஏன் நம்மோடு அக்கம், பக்கத்து வீட்டுக்களில் விளையாடிய நட்பு காலம் முழுவதும் மறக்க முடியாது. கால ஓட்டத்தில் தனித்தையே வாழ்க்கைப் பாதை மாறிவிட்டாலும், பார்த்ததும் உரிமையோடு பேச, கோபப்பட முடியக்கூடிய உறவு இதுதான். நல்ல நண்பர்கள் மட்டும் அமைந்துவிட்டால் நம் வாழ்க்கையே சொர்க்கமாகி விடும்.

இங்கேயும் அப்படித்தான் சில நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரே பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் இவர்கள் ஒன்றாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ரயில்வே தண்டவாளம் ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது. ரயில் வருவதற்கு முன்பே அவர்கள் கடந்து சென்றுவிட முடிவு செய்தனர். ஆனால் திடீரென அவர்களில் ஒருவரது கால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. ரயிலோ பக்கத்தில் நெருங்கிவந்துவிட்டது.

கண் இமைக்கும் நொடியில் நண்பர்கள் மொத்தமாக சேர்ந்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நண்பனை தூக்கி கரைசேர்த்தனர். அதில் இருந்து இரண்டே நொடியில் மின்னல் வேகத்தில் ரயில் அவர்களைக் கடந்து செல்கிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.