ஜெயம் ரவியின் இந்த மனசுக்கு முன்னாடி எதுவுமே பெரிசு இல்லை.. ரசிகருக்காக வீடு தேடி வந்து செய்த செயல்..!

   ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவி. அதனாலேயே தன் பெயரையும் ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். இவரது சகோதரர் ராஜாவும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பாரம்பர்யமான சினிமா குடும்பத்தில் இருந்து வந்த ஜெயம்ரவியின் தந்தை எடிட்டர் மோகனும் கலைக் குடும்பமே!

      ஜெயம் ரவியின் திரைப்படங்கள் தனி ஒருவன், பேராண்மை, நிமிர்ந்து நில் என பல படங்களும் சமூகத்துக்கான கருத்துக்களைச் சொல்லும். சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படமும் ஹிட் அடித்தது. திரையுலகில் செம பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி தீவிர கமல் ரசிகர். ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தார். இப்போது மணிரத்தினத்தின் மெகா பட்ஜெட் படமான பொன்னியின் செல்வனிலும் நடித்துவருகிறார். 

  கடந்த 2009ல் ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்த ஜெயம்ரவிக்கு இப்போது ஆரவ், அயான் என இருமகன்கள் உள்ளனர். இப்போது ஜெயம் ரவியின் பெரிய மனசு விசயத்துக்கு வருவோம். ஜெயம் ரவியின் ரசிகர் ஒருவர் இறந்து போனார். இதைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அந்த ரசிகரின் இல்லத்துக்கே நேரில்போய் ஆறுதல் சொல்லியிருக்கிறார் ஜெயம் ரவி. அத்தோடு மட்டுமல்லாமல் இறந்து போன தன் ரசிகரின், தம்பி, தங்கையின் கல்விக் கட்டணத்தையும் தானே கவனித்துக் கொள்வதாக  ஏற்று இருக்கிறார் ஜெயம் ரவி.. அவரது இந்த பெரிய மனசை பலரும் பாராட்டி வருகின்றனர்.