சொந்தத் தங்கைக்கு கல்யாணம்… கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்… மனதை வருடும் அழகிய காட்சி..!

  முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் படை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சீரியல் நாயகன், நாயகிகளுக்கே பெரிய ரசிகர்கள் படை வந்துவிட்டது. காரணம் வீட்டுக்கு வீடு இன்று டிவி பெட்டி இருக்கிறது. 

  அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் விஜய் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் அதில் மூன்றாவது ஜோடியாக வரும் கதிர், முல்லைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் உண்டு. இந்த சீரியலின் சூப்பர், டூப்பர் ஹிட்க்கு அவர்களும் காரணம்.

இந்த தம்பதிகளுக்குள் சீரியலில் காட்டப்படும் அன்னியோன்யம் ப்ரோகிராமை நிறைய மக்களிடம் சேர்த்திருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா, சில மாதங்களுக்கு முன்பு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   இந்த சீரியலில் கடைசி தம்பியாக ‘கண்ணன்’ என்னும் கேரக்டரில் நடித்து வருபவர் சரவண விக்ரம். இவரது அழகான நடிப்புக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, கண்மணி என்னும் குறும்படம் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து, ரெளத்திரம் பழகு, என் உயிர் நண்பன், பகுத்தறிவு போன்ற குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சூர்யா என்னும் தங்கை உண்டு. அண்மையில் இவரது தங்கைக்கு கல்யாணம் நடந்தது.

  அண்ணன் சரவண விக்ரமை பிரிந்து செல்லமுடியாமல் தங்கை கண்கலங்க, பதிலுக்கு அதைப் பார்த்து சரவண விக்ரமும் கண்கலங்குகிறார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் இப்போது வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். 

https://youtube.com/watch?v=3nxMtNtm24A