சேலையை மடிச்சுகட்டி சாமி.. சாமி பாடலுக்கு பாட்டி போட்ட செம ஆட்டம்.. மிரண்டு போய் பார்த்த இளஞ்சர்கள்..!

   கல்யாண வீட்டிற்கு வந்த பாட்டி ஒருவர் அங்கு போடப்பட்டிருந்த பாடலுக்கு தன் சேலையை மடித்துகட்டி செம குத்தாட்டம் போட்ட காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுதொடர்பாகத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். 

      திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. 

         திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. 

        இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கே, மணமக்களோ, அவர்களது தோழிகளோ கூட ஆடவில்லை.

  கல்யாண வீட்டிற்கு ஒரு பாட்டியும் வந்திருந்தார். இந்நிலையில் திருமணமெல்லாம் முடிந்து சேரை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார் பாட்டி. அந்த வகையில் அவர் மண்பத்தில் வேலைசெய்யும் பாட்டி என்றே சொல்லலாம். அவர் மேடையில் சேரை அடுக்கிக் கொண்டிருந்தபோது புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி…சாமி பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு அந்தப் பாட்டி சேலையை மடித்துக் கட்டிக்கொண்டு செம க்யூட்டாக ஆட்டம் போடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.